இந்திய ராணுவம் குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகத் தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், GEO நியூஸ் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.