சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளார்
சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், மெய்யான சமூகநீதியின் காவலராக பிரதமர் மோடி விளங்குவது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.