பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 
Oct 2, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 

Web Desk by Web Desk
May 7, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங். கமாண்டர் வூமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்தியாவில் பயங்கரவாத நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி வருவதாகக் குற்றம்சாட்டினார். பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் எனத் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,  மொத்தம் 25 நிமிடங்கள் தாக்குதல் நீடித்ததாகவும் கூறினார். மேலும், மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.

Tags: IndiapakistanOperation SindoorPakistan has become a symbol of terrorism: Foreign Secretary Vikram Misrவெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் “ரெட் அலர்ட்” !

Next Post

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்கத் தயார் : பாகிஸ்தான்

Related News

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies