பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 

Murugesan M by Murugesan M
May 7, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங். கமாண்டர் வூமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்தியாவில் பயங்கரவாத நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி வருவதாகக் குற்றம்சாட்டினார். பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் எனத் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,  மொத்தம் 25 நிமிடங்கள் தாக்குதல் நீடித்ததாகவும் கூறினார். மேலும், மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.

Tags: IndiapakistanOperation SindoorPakistan has become a symbol of terrorism: Foreign Secretary Vikram Misrவெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் “ரெட் அலர்ட்” !

Next Post

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்கத் தயார் : பாகிஸ்தான்

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies