பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 
Jun 22, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 

Murugesan M by Murugesan M
May 7, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங். கமாண்டர் வூமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்தியாவில் பயங்கரவாத நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி வருவதாகக் குற்றம்சாட்டினார். பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் எனத் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,  மொத்தம் 25 நிமிடங்கள் தாக்குதல் நீடித்ததாகவும் கூறினார். மேலும், மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.

Tags: IndiapakistanOperation SindoorPakistan has become a symbol of terrorism: Foreign Secretary Vikram Misrவெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் “ரெட் அலர்ட்” !

Next Post

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தை குறைக்கத் தயார் : பாகிஸ்தான்

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies