காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் - சிறப்பு தொகுப்பு!
Aug 24, 2025, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
May 15, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிர்வாகத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்கள் மக்களுக்கு எந்தவகையிலும் உதவ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காட்சிப் பொருளாக மாறியிருக்கும் இ சேவை மையங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அரசு நிர்வாகத்தின் சேவை பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் கிடைக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த இ-சேவை மையங்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு மின்னணு ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இ-சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உட்பட சுமார் 14 ஆயிரத்திற்கும் இடங்களில் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்களில் தங்களுக்கான சேவைகள் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இ சேவை 2.0 எனும் பெயரில் அந்த சேவை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டாலும் கொரானோ தொற்று பரவலால் தொடங்கப்பட்ட வேகத்திலேயே அம்மையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒரே இடத்தில் தங்களுக்குச் சேவையான அனைத்து சேவைகளும் கிடைக்கும் என நம்பி இ -சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலுமே மிஞ்சுகிறது.

பல இடங்களில் இ சேவை மையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஒருசில இடங்களில் இருக்கும் இ சேவை மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சேவையைப் பெற வேண்டியுள்ளது. அதிலும் விரைவில் பள்ளி தொடங்கவிருக்கும் நிலையில் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டுகளை பெற இ – சேவை மையங்களை நாடும் நிலையில் கணினி பழுது, நெட்வொர்க் சேவை பாதிப்பு எனத் தொழில்நுட்பக் கோளாறுகளும் சேவை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மக்களுக்குச் சேவை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. தொடங்கப்பட்ட நோக்கத்தையே மறக்கும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ள இந்த இ-சேவை மையங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனைச் சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

Tags: tn e sevaE-Service Centers as a showcase - Special Collectionஇ-சேவை மையங்கள்
ShareTweetSendShare
Previous Post

விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : உடலில் சேற்றை பூசி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!

Next Post

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies