ஆமை வேகம்...அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Jun 17, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
May 15, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையோரங்களில் நிறைந்திருக்கும் ராட்சத கருவிகளும் சாலைகளில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும் விபத்து ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்கியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, சாலைப்பணி என ஒரே நேரத்தில் முறையான ஒருங்கிணைப்பின்றி நடைபெறும் பணிகள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன. அதோடு எந்தவித திட்டமிடலுமின்றி நடைபெறும் மெட்ரோ பணிகளும் இணைந்திருக்கிறது.  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக எந்தவித  மாற்றுச்சாலைகள் ஏற்பாடுகளின்றி பல சாலைகள் மூடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் மையப்பகுதிகளாகத் திகழும் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மெட்ரோ பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் பணி முடிக்கப்பட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களும் மூடப்படாமல் இருப்பது விபத்தை உண்டாக்கும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

பரபரப்பாக இயங்கும் சென்னையில் பணிக்குச் செல்லும் அவசரத்தில் பயணிப்போருக்கு மெட்ரோ ரயில் பணிகள் தடையாக இருப்பதும், குறுகலான சாலைகளின் இருபுறமும் ராட்சத கருவிகளைப் போட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் பல இடங்களில் தடுப்புகளைப் பல மாதங்களாக வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலால் தினசரி பல இன்னல்களைச் சந்திக்கும் பாதசாரிகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல திட்டமிடும் போது முன்கூட்டியே கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சென்னை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியம் தான் என்றாலும் அதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாகத் திட்டமிட்டு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: மெட்ரோ ரயில் பணிchennai metro workChennai Metro trainTurtle speed...indifference: People in extreme distress due to metro rail work
ShareTweetSendShare
Previous Post

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies