பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு - இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!
Oct 4, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

Web Desk by Web Desk
May 21, 2025, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க முடிவு செய்த மத்திய அரசு, பல்வேறு கட்சிகளை சோ்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை 7 எம்.பி.க்கள் தலைமையின்கீழ் அமைத்தது.

இந்தக் குழுவினா் 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் பயணிக்கவுள்ளனா். அதன்படி இன்று தொடங்கும் பயணம், ஜூன் 7-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. முதற்கட்டமாக ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமை வகிக்கும் குழுக்கள் இன்று பயணத்தைத் தொடங்கவுள்ளன.

சஞ்சய் ஜா தலைமையிலான குழு முதலாவதாக ஜப்பானுக்கும், அதைத் தொடா்ந்து தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.

ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், அதன்பிறகு லைபீரியா, காங்கோ குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு நாளை பயணத்தைத் தொடங்கவுள்ளது.

அதேபோல் பாஜக எம்பிக்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்பி சசிதரூா், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ஆகியோா் தலைமையிலான குழுக்கள் வரும் 24-ஆம் தேதி வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கவுள்ளன.

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation SindoorIndiaoccupied KashmirpakistanPahala attackcentral governmentall-party delegationlashkar e taibaindias stance against terrorismPoKmps journey starts
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

Next Post

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies