சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து - 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
Jul 29, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை பகுதி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில், 4 பேரின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு வழக்கம்போல் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாறை சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த ஆண்டிச்சாமி, ஆறுமுகம், முருகானந்தம் மற்றும் கணேசனின் உடல்கள், பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக பிரேத பரிசோதனை அறை வயிலில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, பிரேத பரிசோதனை அறையின் வாயிலில் இருந்த மின்விளக்கு எரியாததால் இருளில் அஞ்சலி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக வேறொரு விளக்கை பொருத்தினர்.

இதனிடையே, கல்குவாரியில் பாறைகளுக்கிடையே சிக்கியிருக்கும் பொக்லைன் ஆப்ரேட்டரின் உடலை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். பொக்லைன் ஆப்ரேட்டர் ஆர்ஷித்தின் உடல் பாறைகளுக்கிடையே சிக்கிக் கொண்டதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியை தொடங்கினர்.

Tags: Sivaganga Government HospitalsivagangaMallakottairock collapse accident at a quarrybodies handed over
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

Next Post

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies