இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 142வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.
தாய்நாட்டின் மீதான சாவர்க்களின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை எனக்கூறியுள்ள அவர், சுதந்திர இயக்கத்தின் மீதான சாவர்க்கரின் துணிச்சலை தேசம் ஒருபோதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாவர்க்கரின் தியாகமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் சுதந்திரத்திற்காக துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் உச்சத்தைத் தாண்டியவர் சாவர்க்கர் என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நலனை அகில இந்திய உணர்வாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரப் போராட்டத்தை தனது எழுத்துக்களால் வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றியவர் சாவர்க்கர் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சமூகத்தை தீண்டாமையின் கொடுமையில் இருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வீர் சாவர்க்கர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.