வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Aug 24, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தைப் போலவே கோவை மாவட்டம் மருதமலையையும் நெகிழி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப்பைகளுக்குத் தடைவிதிக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்கத் திகழும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டம் என்ற இலக்கை அடைய அடையும் நோக்கில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் நிலையில், அதே நடவடிக்கையைக் கோவை மாவட்டம் மருதமலையிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அங்கு பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகளவு காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

நெகிழிப் பைகளுக்குத் தடை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படாததால், பயன்படுத்திவிட்டு வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெகிழிப்பைகள் பயன்பாடு இல்லாத மருதமலை என்ற சூழலை உருவாக்கக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையையும் மீறி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுவதே அதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் புகழ்பெற்ற மருதமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் நெகிழிப் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பைகளை முற்றிலுமாக ஒழிக்கக் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: நெகிழியில்லா மருதமலைமருதமலைவனவிலங்குகளுக்கு பாதிப்புtamil janam tvImpact on wildlife: Request to take action on plastic-free Marudhamala
ShareTweetSendShare
Previous Post

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Next Post

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!

Related News

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies