இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும் இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அணு ஆயுதத்தை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் அதன் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானும் – இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். வர்த்தகத்தை பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன் எனவும் நைல் நதி அணைக்காக எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையே ஏற்பட்ட சண்டையில் தனது தலையீட்டால் தற்போது அமைதி நிலவுவதாகவும் கூறியுள்ளார். அதேபோல், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே விரைவில் அமைதி ஏற்படும் எனவும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.