ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் 11வது சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமாக நடத்த ஆந்திர மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கிலோ மீட்டர் நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறும் பகுதி 326 பகுதிகளாக பிரிக்கப்பட்டன. இதில் கலந்து கொள்வோருக்காக 3 லட்சத்து 32 ஆயிரம் டி-சர்ட்கள், 5 லட்சம் யோகா பாய்களும் தயார் செய்யப்பட்டன.
அத்துடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்பட 3 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி யோகாசனங்களை செய்து 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.