நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உலா வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேவர்சோலை, பேபி நகர்ப் பகுதியை ஆறுமுக என்பவரைக் காட்டு யானை தாக்கி கொன்றது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கும்கி யானை மூலம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.