கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அழகர்நகர் பூங்காவில் 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
அப்போது அவர் பல்வேறு யோகாசனங்களைச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், முருக பக்தர்கள் மாநாட்டிற்கான இ – பாஸ் ரத்து விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளதாகக் கூறினார்.
சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.