பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்ட நபர் 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவரைக் கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வந்த வினோத் குமாரின் உறவினர்கள் அவருடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வழக்கம் போல் வெளியில் சென்ற வினோத்குமாரை அவரது உறவினர் குபேந்திரன் உள்ளிட்டோர் விரட்டி சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பித்து ஓடிய வினோத் குமார் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டியுள்ளார், ஆனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கும்பல் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அறிந்த போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.