ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் சிக்கியிருந்த 594 இந்தியர்கள் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நீடித்து வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு பத்திரமாகத் தாயகம் அழைத்து வருகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து இதுவரை ஆயிரத்து 713 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து 165 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இஸ்ரேலின் ஜோர்டானின் அம்மான் பகுதியில் தங்கயிருந்த 594 இந்தியர்களும் விமானப்படையின் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.
டெல்லி வந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். பின்னர், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தாயகம் திரும்பிய இந்தியர்கள் பாரத் மாதா கி ஜெ என உற்சாக முழக்கம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், இஸ்ரேலில் சிக்கியிருந்த இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறினார்.