வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உடல் நலக்குறைவு, வீட்டுக்கடன், திருமணம் உள்ளிட்ட காரணங்களை பதிவிட்டு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், இதற்கு எவ்வித சான்றிதழ்களும் தேவையில்லை எனவும், விண்ணப்பித்த 3 நாட்களில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை ஒரு லட்சம் வரையிலான தொகை மட்டுமே ஆட்டோ கிளைமில் எடுக்க முடியும் என்ற வசதி இருந்த நிலையில், தற்போது 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.