பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடா்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம்!
Jul 30, 2025, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடா்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம்!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம் அனல் பறந்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் நேற்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கை, அமெரிக்காவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை என்று கூறிய ஜெய்சங்கர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை எனத் தெரிவித்தார். ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக மற்ற நாடுகளிலிருந்து மே 10ஆம் தேதி அழைப்பு வந்ததாகக் கூறிய அவர், ராணுவ நடவடிக்கைக்கான தலைமை தளபதி மூலம் இதனைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவுடன் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்துப் பேசவில்லை என்றும், வணிக ரீதியான எந்தவொரு பேச்சும் நடக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

ஆப்ரேஷன் சிந்தூருடன் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை நின்றுவிடாது என்று எச்சரித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டு மக்களைக் காக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சியினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் வேறு சில நாடுகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியினர் அந்நியர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகக் கூறிய அவர், அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாகச் சாடினார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கும் அவர்கள் அங்கேயே அமர்ந்திருப்பார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்  மக்களவையில் விளக்கமளித்தார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: ஆப்ரேஷன் சிந்தூா்பஹல்காம் தாக்குதல்மக்களவைDiscussion in Lok Sabha on Pahalgam attackOperation Sindhupal till midnight
ShareTweetSendShare
Previous Post

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!

Next Post

அமெரிக்கா : ஷாங்காய் தினத்தை ஒட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகள்!

Related News

இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயில் ஆடி மாத பெருவிழா – வள்ளி கும்மி ஆட்டம் கோலாகலம்!

வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியை பிடித்து மருமகள் தாக்குதல்!

அண்ணா நகர் அருகே காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை திமுக நிர்வாகி பேரன் கைது!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்!

நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு : ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 60,000 ஆக உயர்வு!

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies