அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக - மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!
Aug 24, 2025, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அவினாசி சாலையில் அரசு ஒப்புதல் கொடுத்த வரைபடத்தை மாற்றி தனியார் உணவகத்திற்குச் சாதகமாக பாலப்பணிகளை மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பிரதான பகுதியான அவினாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முக்கிய சந்திப்புகளில் ஏறுதளமும், இறங்கு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு உள்ளே செல்லும் பாதையிலும், வெளியே வரும் பாதையிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வேறொருவருக்குச் சொந்தமான இடத்தில் தூண்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனக்குச் சொந்தமான இடத்தில் சம்பந்தமே இல்லாமல் பாலத்திற்கான தூண் அமைக்கும் பணியைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக நெடுஞ்சாலை அதிகாரிகள் செயல்பட்டதை நீதிமன்றம்  கண்டறிந்ததோடு, ஏற்கனவே திட்டமிட்ட வரைபடத்தின் படி பாலத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு புதிய தூண்கள் அமைக்கும் செலவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் படி பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், பொதுமக்களிடம் எந்தவித கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக வரைபடத்தை மாற்றியிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. அரசின் உத்தரவுக்கு எதிராகவும் தனியார் உணவகத்திற்கு முரணாகவும் நடந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைய வேண்டிய பாலப்பணிகள், ஒரு சில அதிகாரிகளின் தவறால் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே 7 மாத காலம் தாமதமாகியிருக்கும் நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Mega fraud by officials: Map of bridge altered in favor of restaurantஅதிகாரிகளின் மெகா மோசடிகோவை அவினாசி சாலைபாலப்பணி
ShareTweetSendShare
Previous Post

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

Next Post

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies