அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக - மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!
Jun 22, 2026, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அவினாசி சாலையில் அரசு ஒப்புதல் கொடுத்த வரைபடத்தை மாற்றி தனியார் உணவகத்திற்குச் சாதகமாக பாலப்பணிகளை மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பிரதான பகுதியான அவினாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முக்கிய சந்திப்புகளில் ஏறுதளமும், இறங்கு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு உள்ளே செல்லும் பாதையிலும், வெளியே வரும் பாதையிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வேறொருவருக்குச் சொந்தமான இடத்தில் தூண்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனக்குச் சொந்தமான இடத்தில் சம்பந்தமே இல்லாமல் பாலத்திற்கான தூண் அமைக்கும் பணியைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக நெடுஞ்சாலை அதிகாரிகள் செயல்பட்டதை நீதிமன்றம்  கண்டறிந்ததோடு, ஏற்கனவே திட்டமிட்ட வரைபடத்தின் படி பாலத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு புதிய தூண்கள் அமைக்கும் செலவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் படி பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், பொதுமக்களிடம் எந்தவித கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக வரைபடத்தை மாற்றியிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. அரசின் உத்தரவுக்கு எதிராகவும் தனியார் உணவகத்திற்கு முரணாகவும் நடந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைய வேண்டிய பாலப்பணிகள், ஒரு சில அதிகாரிகளின் தவறால் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே 7 மாத காலம் தாமதமாகியிருக்கும் நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Mega fraud by officials: Map of bridge altered in favor of restaurantஅதிகாரிகளின் மெகா மோசடிகோவை அவினாசி சாலைபாலப்பணி
ShareTweetSendShare
Previous Post

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

Next Post

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

Related News

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies