புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 6, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்நிலையம் செல்பவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா?  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்திற்கு நேற்றிரவு புகாரளிக்க வந்தவர் மேல்தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்று காலையில் பணிக்கு வந்த காவலர்கள் தான் அதைக் கண்டறிந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்த தமிழகக் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு பல அப்பாவிகள் பலியாகியுள்ள நிலையில், ஆளும் அரசின் மீதோ அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சட்டம் ஒழுங்கின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை.

எந்தக் கட்டுக்கதைகளைக் கேட்கவும் மக்கள் தயாராக இல்லை. திறனற்ற திமுக ஆட்சியில் அதிகார மதம் பிடித்த அதிகாரிகளின் கையில் தமிழகம் சிக்குண்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, புகாரளிக்க வந்த நபர் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்தது எப்படி யாருக்கும் தெரியாமல் போனது? புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? எந்தக் காவலர்களும் அதை கவனிக்கவில்லையா? முக்கியமாக புகாரளிக்க வந்தவரிடம் அவரது முழு விலாசத்தையும் பெறுவது தானே முறை, அப்படியிருக்கையில் இறந்தவர் யாரென்றே தெரியவில்லை எனக் காவல்துறை கூறுவது எதை மூடி மறைப்பதற்காக? யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவி ஆய்வாளர் அறை வரை எப்படி அனுமதி வழங்கப்பட்டது? காலை பத்து மணி வரை சுத்தம் செய்வதற்காகக் கூட யாரும் உதவி ஆய்வாளரின் அறை பக்கம் ஒதுங்கவில்லையா? ஒருவேளை விசாரணை என்ற பெயரில் அவரும் அடித்துக் கொல்லப்பட்டாரா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை.

இல்லையேல் கட்டப்பஞ்சாயத்து காவல்துறைக்கு எதிராகவும் இந்த அராஜக ஆட்சி ஒழியவும் மக்கள் போராட்டங்களை தமிழக பாஜக  முன்னெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: DMKMK Stalincrime news todayநயினார் நாகேந்திரன் கேள்விtn police news todayDid the person who came to file a complaint come to the police station with a noose?: Nainar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

சென்னை ராயபுரம் : நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Next Post

ராமநாதபுரம் : எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது!

Related News

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல் : புத்தகத்தை எடுக்க முயன்றபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

உத்தரகாசியில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி!

ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் : முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை!

மதுரை : வெறும் கைகளால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் தூய்மை பணியாளர்கள்!

பிலிப்பைன்ஸ் செல்ல இனி விசா தேவையில்லை!

சென்னை தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!

இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies