புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jan 29, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்நிலையம் செல்பவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா?  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்திற்கு நேற்றிரவு புகாரளிக்க வந்தவர் மேல்தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்று காலையில் பணிக்கு வந்த காவலர்கள் தான் அதைக் கண்டறிந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்த தமிழகக் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு பல அப்பாவிகள் பலியாகியுள்ள நிலையில், ஆளும் அரசின் மீதோ அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சட்டம் ஒழுங்கின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை.

எந்தக் கட்டுக்கதைகளைக் கேட்கவும் மக்கள் தயாராக இல்லை. திறனற்ற திமுக ஆட்சியில் அதிகார மதம் பிடித்த அதிகாரிகளின் கையில் தமிழகம் சிக்குண்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, புகாரளிக்க வந்த நபர் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்தது எப்படி யாருக்கும் தெரியாமல் போனது? புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? எந்தக் காவலர்களும் அதை கவனிக்கவில்லையா? முக்கியமாக புகாரளிக்க வந்தவரிடம் அவரது முழு விலாசத்தையும் பெறுவது தானே முறை, அப்படியிருக்கையில் இறந்தவர் யாரென்றே தெரியவில்லை எனக் காவல்துறை கூறுவது எதை மூடி மறைப்பதற்காக? யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவி ஆய்வாளர் அறை வரை எப்படி அனுமதி வழங்கப்பட்டது? காலை பத்து மணி வரை சுத்தம் செய்வதற்காகக் கூட யாரும் உதவி ஆய்வாளரின் அறை பக்கம் ஒதுங்கவில்லையா? ஒருவேளை விசாரணை என்ற பெயரில் அவரும் அடித்துக் கொல்லப்பட்டாரா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை.

இல்லையேல் கட்டப்பஞ்சாயத்து காவல்துறைக்கு எதிராகவும் இந்த அராஜக ஆட்சி ஒழியவும் மக்கள் போராட்டங்களை தமிழக பாஜக  முன்னெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Did the person who came to file a complaint come to the police station with a noose?: Nainar Nagendran questionsDMKMK Stalincrime news todayநயினார் நாகேந்திரன் கேள்விtn police news today
ShareTweetSendShare
Previous Post

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

Related News

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட பதிவுகள் நீக்கம் – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

Load More

அண்மைச் செய்திகள்

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை அடையாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 பேர் கைது!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன – பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies