பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?
Jan 14, 2026, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸ், ரஷ்யா இடையே வெடித்துள்ள வார்த்தைப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அப்படியென்ன நடந்தது… விரிவாகப் பார்க்கலாம்… இந்தச் செய்தித் தொகுப்பில்.

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஒருபக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்…. அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிறுத்தி மற்றொரு பக்கம் காய்களை நகர்த்தி வருகின்றன.

அண்மையில் பிரெஞ்ச் டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,ரஷ்யாவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக ரஷ்யாவைப் பொது எதிரி என்று அவர் அடையாளப்படுத்தியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. ரஷ்ய அதிபரைப் பிரிடேட்டர் (predator) என்றும், ogre at our doorstep என்றும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கு ரஷ்யாவும் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர்  புதினின் ஆதரவாளரும், கிரெம்ளிக் ஆதரவு தொலைக்காட்சி தொகுப்பாளருமான விளாடிமிர்  சோலோவியோவ் (Vladimir Solovyov), அரசு தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியின்போது, பிரான்ஸை அச்சுறுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தினார்.

பிரான்ஸை ரஷ்யா கைப்பற்றினால், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிகாரிகளின் காலணிகளைத் துடைத்து சுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவார் என்றும், பிரான்ஸ் அதிபர் மாளிகையான எலிசேவில் ரஷ்ய வீரர்களை நிறுத்துவது பற்றியும் விளாடிமிர்ச் சோலோவியோவ் விவரித்திருந்தார்.

சோலோவியோவின் பேச்சை அங்கீகரித்துள்ள ரஷ்யாவின் அரசியல் விஞ்ஞானியான (Sergei Mikheyev) செர்ஜி மிகீவ்,ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பா எந்தச் சமரசத்தையும் எதிர்பார்க்ககூடாது என்றார். மேலும், உக்ரைனில் தரைப்படைகள் இருக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பிய சோலோவியோவ், European mangy animals உக்ரைன் வரக் காரணம் என்ன? அவற்றை மீண்டும் அங்கேயே புதைக்க முடியுமா என்று ஐரோப்பிய நாடுகளை அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை உபயோகித்தார்.

ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் எனக் கடந்த காலங்களிலும் சோலோவியோவ் பேசியிருக்கிறார். தற்போது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குக் கடுமையான பதிலடி தரும் வகையில் அவர் பேசியது இருநாடுகளுக்கு இடையே வார்த்தைப் போராக மாறியுள்ளது.

ஒரு நாட்டின் அதிபரை, அரக்கன் என்று பிரான்ஸ் அதிபர் விமர்சித்திருப்பதில் இருந்து தொடங்கிய இந்த வார்த்தைப் போரானது, மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு அச்சாரமிட்டுள்ளதாகச் சர்வதேச அரசியல் சமூகம் கருதுகிறது.

Tags: Russia war of words: Is it leading to a new war?ரஷ்யா வார்த்தை போர்Francerussiaரஷ்யா - உக்ரைன் போர்ரஷ்யாபிரான்ஸ்
ShareTweetSendShare
Previous Post

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

Next Post

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies