புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவிகிதம் வரை வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை அமெரிக்க நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன.

இந்தியாவுக்கு 50 சதவிகித வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமர்சனக் கணைகள் வீசப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.

இதன் தாக்கத்தைப் பெப்ஸி, கோகோ கோலா, சப்வே, கேஎஃசி, மெக்டொனால்ட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. வர்த்தகப் போர் காரணமாக சுதேசி பொருட்களை ஆதரிக்குமாறு இந்தியர்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, பொருளாதாரச் சுயநல அரசியல், உலக அளவில் பரவி வருவதாகவும், தங்களது சொந்த நலனில் மட்டுமே சில நாடுகள் கவனம் செலுத்துவதாகவும் அமெரிக்காவை மறைமுகமாகச் சாடியிருந்தார். இது தற்போது மக்களிடையே உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆம் ஆத்மி எம்.பி., அசோக்குமார் மிட்டல், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள கடிதமும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க வரி விதிப்பின் மூலம், 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதேசி இயக்கத்தை 146 கோடி இந்தியர்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பதாகக் கூறினார்.

அந்த உணர்வை இந்தியர்கள் வெளிப்படுத்தினால், பொருளாதார தாக்கம் இந்தியாவைவிட அமெரிக்காவுக்குத்தான் அதிகமாக இருக்கும் என்று டிரம்பை எச்சரித்திருந்தார். பெப்சிகோ, மெக்டொனால்ட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள வணிகத்தால் கொள்ளை இலாபத்தை ஈட்டுகின்றன.

மெக்டொனால்டுகளை இயக்கும் நிறுவனமான Westlife Foodworld Limited 2024ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 390 கோடி வருவாயை ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட 5 சதவிகிதம் அதிகம். பெப்சிகோ இந்தியா அதே நிதியாண்டில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெப்சிகோ இந்தியா நிறுவனம், 4000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பது, இந்திய சந்தைக்கான நீண்டகால உறுதிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவில் அமெரிக்காவைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கவிட்ட நிலையில், இந்தியாவில் வீசும் அமெரிக்க எதிர்ப்பு அலை, அமெரிக்க நிறுவனங்களுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Tags: American companies lament: Anti-American wave in Indiaபுலம்பும் அமெரிக்க நிறுவனங்கள்பெப்ஸிகோகோ கோலாசப்வேகேஎஃசிமெக்டொனால்ட்ஸ்americausaDonald Trumpஇந்தியா
ShareTweetSendShare
Previous Post

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

Next Post

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies