விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!
Sep 13, 2025, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உலாவும் தெரு நாய்களால், நடை பயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் . சேலம் மாநகரில் உள்ள ஒரே மைதானமான இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகை தருகின்றனர். மேலும் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மைதானத்திற்கு வருவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. விளையாட்டு மைதானத்திலேயே முகாமிட்டுள்ள அவை, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் படுத்து உறங்கி
இடையூறு விளைவிக்கின்றன.

சில நேரங்களில் அங்கு பயிற்சி மேற்கொள்ள வருபவர்களை தெருநாய்கள் துரத்தியும், கடித்துக் குதறியும் வருகின்றன. இதனால், மக்களால் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அவை அசுத்தம் செய்துவைப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மைதானத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சிறிய மழை பெய்தால்கூட மைதானத்தில் நீர்த் தேங்கிவிடுதாகவும், அண்மையில்கூட மழைநீர் தேங்கியதால் முதல்வர்க் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மைதானத்தில் அவ்வப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் நிலையில், போட்டிகள் முடிவடைந்த பிறகு குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அருள், ஏற்காடு அடிவாரம்)இப்படி, நாய்கள் தொல்லை, மழைநீர் தேக்கம், குப்பைகூளம் உள்ளிட்டவற்றால், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

Tags: dogsThe plight of the playground: Athletes are screaming because of stray dogs!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்!

Next Post

குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Related News

தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies