விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!
Jul 29, 2026, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உலாவும் தெரு நாய்களால், நடை பயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் . சேலம் மாநகரில் உள்ள ஒரே மைதானமான இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகை தருகின்றனர். மேலும் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மைதானத்திற்கு வருவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. விளையாட்டு மைதானத்திலேயே முகாமிட்டுள்ள அவை, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் படுத்து உறங்கி
இடையூறு விளைவிக்கின்றன.

சில நேரங்களில் அங்கு பயிற்சி மேற்கொள்ள வருபவர்களை தெருநாய்கள் துரத்தியும், கடித்துக் குதறியும் வருகின்றன. இதனால், மக்களால் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அவை அசுத்தம் செய்துவைப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மைதானத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சிறிய மழை பெய்தால்கூட மைதானத்தில் நீர்த் தேங்கிவிடுதாகவும், அண்மையில்கூட மழைநீர் தேங்கியதால் முதல்வர்க் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மைதானத்தில் அவ்வப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் நிலையில், போட்டிகள் முடிவடைந்த பிறகு குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அருள், ஏற்காடு அடிவாரம்)இப்படி, நாய்கள் தொல்லை, மழைநீர் தேக்கம், குப்பைகூளம் உள்ளிட்டவற்றால், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

Tags: dogsThe plight of the playground: Athletes are screaming because of stray dogs!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்!

Next Post

குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies