களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
Oct 9, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை மயிலாப்பூர் மாடவீதிகளில் கொலு பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைச் செய்யப்படும் கொலு பொம்மைகள் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் நவராத்திரி திருவிழா வந்துவிட்டால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மயிலாப்பூர் மாடவீதிகள் தான். மயிலைக் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளையும் வண்ணமயமான கொலு பொம்மைகள் முழுமையாக அலங்கரித்துள்ளன.

மண், பேப்பர், மரம், மார்பிள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் மட்டுமல்லாமல், தங்க முலாம் பூசப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது

ஒன்பது நாட்களாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவுக்காக விற்பனைச் செய்யப்பட்டு வரும் கொலு பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பும், கலை நயமும் நிறைந்த கலாச்சாரச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.

மண் மற்றும் காகிதக் கூழ் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கொலு பொம்மைகள் சென்னை மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபடுவதால் மயிலாப்பூர் மாடவீதியில் கொலு பொம்மை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளளது.

தசாவதாரம், அஷ்டலட்சுமி, திருமணம் போன்ற பாரம்பரியங்களோடு, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களின் உருவங்கள், சந்திரயான் போன்ற சமகாலச் சிறப்புகளும் கொலு பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 ரூபாயில் தொடங்கும் கொலு பொம்மை விற்பனை அதிகபட்சமாக லட்ச ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது.

புதுப்புது வடிவங்களிலான கொலு பொம்மைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பெரும்பாலான பொதுமக்களின் விருப்பத்திற்குரிய இடமாக மயிலாப்பூர் மாடவீதிகள் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு வந்து கொலுபொம்மையை வாங்குவதை வாடிக்கையாகவும் சிலர் வைத்திருக்கின்றனர்

நவராத்திரி என்றாலே கொலு பொம்மையோடு மயிலாப்பூர் மாடவீதிகளும் நினைவிற்கு வரும் அளவிற்கு மயிலாப்பூர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நடப்பாண்டு நவராத்திரி கொலு பொதுமக்களுக்கு மட்டுமல்லாது அதனை விற்கும் வியாபாரிகளுக்கும் நன்மைப் பயக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: Weedy Navaratri: People are interested in buying Kolu dollsகளைகட்டும் நவராத்திரிகொலு பொம்மைகள்ஆர்வம் காட்டும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Related News

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies