தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்...!
Mar 22, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகளின் தாக்குதல்களால் மனித உயிர்கள் பரிதாபமாகப் பறிபோகின்றன… வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இந்த 3 மாநில வனப்பகுதிகளை ஒட்டிக் கூடலூர் சட்டமன்றத் தொகுதி இருகிறது. இங்குதான் காட்டு யானைகளால் மக்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.. கூடலூர் பகுதி மக்கள் தேயிலை, குறுமிளகு, வாழை என விவசாயம் செய்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது கூடலூர். இந்த வனப்பகுதியில் யானை, புலி,சிறுத்தை, கரடி காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூடலூர் பகுதியில் யானைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வரும் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளை நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. கூடலூர் நகரம், பந்தலூர், பாடந்துறை, தேவர் சோலை, ஓவேலி, மண் வயல், சேரம்பாடி, தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்துகின்றன.

தினமும் காட்டு யானைகளின் தொந்தரவு தொடர்வதால் அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுவாழ்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 160 பேர் யானை தாக்கி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்துமனிதர்களைப் பாதுகாக்கக தவறிய வனத்துறையினரை கண்டித்து சாலை மறியல், முற்றுகை போராட்டம், கடைஅடைப்புப் போராட்டம் எனப் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். மறுபுறம் பாடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை புலிஅடித்துக் கொன்று விடுவதாலும் அப்பகுதி மக்கள் பீதியில் இருக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் புலிகள் தாக்கி இறந்துள்ளன. கூடலூர்தொகுதிக்குக் கொடுத்தத எந்தவொரு வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், இனி வரும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளால் கூடலூர் பகுதி மக்கள் நாள்தோறும் உயிர்பயத்தில் வாழ்கின்றனர். உயிர்பலிகள் தொடராமல் வனத்துறை மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: We will boycott the election: People who are crying because of wild animalதேர்தலை புறக்கணிப்போம்காட்டு யானைகள்புலிநீலகிரி மாவட்டம்கூடலூர்
ShareTweetSendShare
Previous Post

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Next Post

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies