GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Jun 23, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்தில் அழகு சாதன தயாரிப்புக்கான மூலப்பொருள் கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூலப் பொருட்களை வாங்கும் போது அதனை ஆய்வு செய்யத் தவறியதும், தரமற்ற முறையில் இருமல் மருந்தைத் தயாரித்ததுமே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை அருந்திய 22 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கோல்ட்ரிப் மருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் ஷ்ரேசன் எனும் தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்திலிருந்து வந்த காவல்துறையினர் தனியார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் எந்தவொரு மருந்து நிறுவனமாக இருந்தாலும் அதன் உற்பத்தியை தொடங்குவதற்கும், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரச்சான்றிதழ் வழங்குவதற்கும் முழு பொறுப்பும் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு தான் இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போலப் பேசிவந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், பின்னாளில் தனது துறையின் அலட்சியத்தை உணர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை சுகாதாரத்துறையும், தமிழக அரசு நிர்வாகமும் அலட்சியமாக எதிர்கொள்வதாக மத்திய பிரதேச மாநில அரசுக் குற்றம் சாட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் சுமார் 300க்கும் அதிகமான விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோல்ட்ரிப் மருந்தின் மூலப் பொருட்களை ஆய்வு செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புரோப்பிலின் கிளைக்கால் வேதிப்பொருளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவகை மருந்து தயாரிக்கவும், மற்றொருவகை அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல் மற்றும் இருமல் மருந்துகளை தயாரிக்கும் போது அதிலுள்ள வேதிப் பொருட்கள் எளிதில் கரைய புரோப்பிலின் கிளைக்கால் என்ற மூலப் பொருளைப் பயன்படுத்துவதும் வழக்கமான நடைமுறையில் உள்ளன.

புரோப்பிலின் கிளைக்கால் மூலப்பொருட்களை வாங்கும் போது, மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில், அவற்றை மேற்கொள்ள ஸ்ரீசன் நிறுவனம் தவறியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதன்படி ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் மருந்துக்கு அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் புரோப்பிலின் கிளைக்கால் மூலப் பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூலப் பொருட்களின் தன்மையை ஆராயாமலும், அதற்கான தயாரிப்புச் சான்றிதழை பெறாமலும் ஸ்ரீசன் நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பெயிண்ட் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் புரோப்பிலின் கிளைக்காலில், டை எத்தலீன் கிளைக்கால் அதிகளவில் இருக்கும் என்பதால், அவை குழந்தைகளின் சீறுநீரகங்களை பாதிப்படையச் செய்து அவர்களின் உயிரைப் பறித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Cosmetic ingredients mixed to make GOLDTRIP cough medicine: Shocking information revealed in investigationGOLDTRIP இருமல் மருந்து
ShareTweetSendShare
Previous Post

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

Next Post

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies