டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 2 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த விசாரணையில், இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளதாகவும், இளையராஜாவின் பாடல்களின் புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து, டியூட் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, 2026 ஜனவரி 7ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நீக்க ஏதுவாக ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் எனப் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, இளையராஜா பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
















