திருச்சிக்கு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு, நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக அந்த அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஆர்எஸ்எஸ்-ன் அடுத்தக்கட்ட திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக திருச்சி உறையூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு மோகன் பகவத் சென்றடைந்தார். அப்போது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோகன் பாகவத் வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
















