வழக்கு ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தாம் தடை பெற்றதாகவும், அதற்காக அவரை பற்றி விமர்சிக்கவில்லை என்றும் பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதி மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனக்கு எதிராக ஒரு உத்தரவைப் பிறப்பித்ததாக கூறினார்.
அவர் பிறப்பித்த தீர்ப்பிற்குத் தடை விதிக்க வேறு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது ஒரு குடிமகனின் உரிமை என்பதை வலியுறுத்திய அண்ணாமலை, நீதிபதியின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் மேல்முறையீடு செய்வதை மட்டுமே தான் செய்ததாகவும், தனிப்பட்ட முறையில் நீதிபதியை குறை கூறவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.
















