பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 160 உரைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாத பிற இந்திய மொழிகளில் நிகழ்த்தப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இன்பத் தமிழ் மொழியில் அதிக உரைகள் (50) நிகழ்த்தப்பட்டன என்பது கூடுதல் சிறப்பு என தெரிவித்துள்ளார்.
தமிழைப் போலவே, மராத்தியம், வங்காளம், போடோ, மணிப்புரி, சந்தாலி, அஸாமீஸ், உருது, கன்னடம் போன்ற பல இந்திய மொழிகள் நேரடி மொழிபெயர்ப்பு மூலம் மக்களவை அரங்கை அலங்கரித்து நமது நாட்டின் செழிப்பான கலாச்சாரத்தைப் பறைசாற்றியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தி திணிப்பு என்று போலியாகக் கூப்பாடு போட்டுக் குட்டிக்கரணம் அடிக்கும் அறிவாலய
அரசின் மொழி அரசியலுக்கு, இது மீண்டுமொரு சவுக்கடி என்றும், இந்தியாவின் 22 அலுவல் மொழிகளிலும் நேரடி மொழிபெயர்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாகத் திகழும் பிரதமர் மோடிக்கும் நயினார் நன்றி தெரிவித்துள்ளார்.
















