RSS & BJP-யை புகழ்ந்த திக்விஜய் சிங் - தர்மசங்கடத்தில் காங்கிரஸ்!
Mar 19, 2026, 04:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

RSS & BJP-யை புகழ்ந்த திக்விஜய் சிங் – தர்மசங்கடத்தில் காங்கிரஸ்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாஜகவையும் புகழ்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு கவனம் பெற்று வருகிறது. அதே சமயம், அந்தப் பதிவு காங்கிரஸில் நிலவும் சர்வாதிகார தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலும் அமைந்துள்ளது. அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவை உறுப்பினருமாகவும் இருந்து வருபவர் திக்விஜய் சிங். இவர் கடந்த வாரம் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்த அவர், அதன் அவசியத்தையும் சுட்டி காட்டியிருந்தார்.

இந்நிலையில், திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அரசியல் வட்டாரத்திலும் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி தரையில் அமர்ந்திருந்தார்.

இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள திக்விஜய் சிங், இந்தப் படம் மிகவும் கவரும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவகராகவும், ஜனசங்கத்தின் தொண்டராகவும் இருந்த நரேந்திர மோடி, அந்தப் புகைப்படத்தில் தலைவர்களின் காலடியில் அமர்ந்திருப்பதை அவர் சுட்டி காட்டியுள்ளார்.

அந்த நிலையில் இருந்து உயர்ந்து, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் மோடி உயா்ந்துள்ளதையும் திக்விஜய் சிங் தனது பதிவில் கோடிட்டு காட்டியுள்ளார். இது, ஒரு அமைப்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது எனக்கூறி, ஆர்எஸ்எஸ்-ஐயும், பாஜகவையும் அவர் பாராட்டியுள்ளார்.

பாஜகவில் உழைப்பவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவமும், உரிய அங்கீகாரமும் வழங்கப்படுகிறது என்பதுதான், தனது பதிவின் மூலம் திக்விஜய் சிங் சொல்ல வரும் செய்தி. அவர் யாருக்கு இந்த செய்தியைச் சொல்கிறார் என்ற கேள்வி எழலாம். அவரது பதிவிலேயே அதற்கான பதில் உள்ளது. தனது பதிவில் அவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார்.

இப்படி காங்கிரசின் மேலிடத்தை டேக் செய்து, பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் திக்விஜய் சிங் புகழ்ந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் செய்தி தொடர்பாளரான சி.ஆர். கேசவன், திக்விஜய் சிங்கின் இந்தப் பதிவு எதேச்சதிகாரம் மற்றும் ஜனநாயக விரோதம் கொண்ட காங்கிரஸ் தலைமையை அம்பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ராகுல் காந்தியின் குடும்பம் எவ்வாறு கட்சியை இரக்கமின்றி சர்வாதிகார முறையில் நடத்துகிறது என்பதையும், கட்சி தலைமை எவ்வளவு எதேச்சதிகாரத்தோடு நடந்துகொள்கிறது என்பதையும் இந்தப் பதிவு தெள்ளதெளிவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திக்விஜய் சிங் போட்டுள்ள இந்த வெடிகுண்டை ராகுல் காந்தி தைரியமாக எதிர்கொள்வாரா எனவும், சி.ஆர். கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திக்விஜய் சிங்கின் ராஜ்யசபா பதவி காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வருகிறது. அவருக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட வாய்பில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில், கமல்நாத் மற்றும் மீனாட்சி நடராஜன் இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை பதவிக்கான ரேஸில் உள்ளனர். மேலும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர் உமாங் சிங்கரும் திக்விஜய் சிங்கிற்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான், திக்விஜய் சிங்கின் இந்த எக்ஸ் பதிவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும், காங்கிரசில் நிலவும் குடும்ப அரசியல் குறித்த நேர்மையான கருத்தாகவே திக்விஜய் சிங்கின் பதிவு கருதப்படுகிறது. நாடு முழுவதும் ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசி வருகிறார். ஆனால், சொந்த கட்சிக்குள்ளேயே அவர் அந்த ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கு மேலும் ஆதாரமாக திக்விஜய் சிங்கின் இந்த அதிருப்தி பதிவு அமைந்துள்ளது.

Tags: PM ModiRSSCongressDigvijay Singh praised the RSS and BJP - putting the Congress in an awkward position
ShareTweetSendShare
Previous Post

தலைவர்களுக்காக தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் – அசத்தும் அதிநவீன வசதிகள்!

Next Post

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது – நயினார் நாகேந்திரன்

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies