தலைவர்களுக்காக தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் - அசத்தும் அதிநவீன வசதிகள்!
Apr 26, 2026, 05:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தலைவர்களுக்காக தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் – அசத்தும் அதிநவீன வசதிகள்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் என்று வந்துவிட்டாலே அரசியல் கட்சித் தலைவர்களோடு, அவர்கள் பயன்படுத்தும் பிரச்சார வாகனங்களும் அதிகளவு பேசுபொருளாகி விடுகின்றன. அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிது புதிதாகத் தயாரிக்கப்படும் பிரச்சார வாகனங்கள் குறித்தும், அதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ எந்தத் தேர்தலாக இருந்தாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் இறுதிகட்ட பிரசாரங்கள் தான் அவர்களுக்கான வாக்கு வங்கியை உறுதிபடுத்தும் சக்தியாக அமைந்துள்ளன.

அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், களைப்பின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான சகலவசதிகளும் அடங்கிய பிரச்சார வாகனங்களும் அண்மைக்கால தேர்தல்களில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், அவரவர் விரும்பும் வகையிலான பணியில் கோவையைச் சேர்ந்த கோயாஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், தற்போதே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான பிரச்சார வாகனங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

வாகனத்தில் அமர்ந்தபடியே வழிநெடுகிலும் தொண்டர்களை சந்திக்கும் வசதியும், வாகனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தபடி பிரச்சாரம் செய்யும் வசதியும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் தலைவர்கள் ஓய்வெடுக்க படுக்கை அறைகள், சக தலைவர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்யத் தனி அறைகள், கழிவறை மற்றும் குளியலறைகள் என அனைத்து விதமான வசதிகளுடனும் இப்பேருந்துகள் வடிவமைக்கப்படுகின்றன.

வழக்கமான வசதிகளுடன் சேர்த்து இம்முறை, ஹைட்ராலிக் மேடை, இணைய சேவை, மினி டிவி, கணினிகள், ஒலிப்பெருக்கிகள், சிசிடிவி கேமிராக்கள் அடங்கிய வகையிலும் பிரச்சார வாகனத்தை தயாரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்டர்கள் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு தேர்தலிலும் அதிகளவில் பேசப்படும் பிரச்சார வாகனங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பெருமளவு பேசப்படும் பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: state-of-the-art facilities: Election campaign vehicles being prepared for the leadersதேர்தல் பிரசார வாகனங்கள்tn election 2026bjpL MuruganDMKseemanimpressive!
ShareTweetSendShare
Previous Post

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

RSS & BJP-யை புகழ்ந்த திக்விஜய் சிங் – தர்மசங்கடத்தில் காங்கிரஸ்!

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies