ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - தீவிரமடையும் போராட்டம்...இணைய சேவை துண்டிப்பு!
Jan 13, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – தீவிரமடையும் போராட்டம்…இணைய சேவை துண்டிப்பு!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களுக்காக தொடங்கிய போராட்டம் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டமாக தீவிரமடைந்துள்ளது. ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா ?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் ஏற்பட்ட போரின் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பணவீக்கம் 52 சதவீதமாக உள்ள நிலையில் ஒரு அமெரிக்க டாலருக்கு ஒன்றரை லட்சம் ரியால் என்ற அளவில் ஈரானின் நாணய மதிப்பு சரிந்தது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், உச்சத் தலைவர் அதயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்கள் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,270-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இளவரசர் ரேசா பஹ்லவி ஷா போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் மக்கள் லட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வாதிகாரிக்கு மரணம், இஸ்லாமியக் குடியரசுக்கு மரணம் என்று மத அடக்குமுறை இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன. இதுவே கடைசிப் போர்! பஹ்லவி திரும்புவார்!” என்றும் ஷாவுக்கு ஆதரவாகவும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் ஈரானில் இணைய சேவையும், தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப் பட்டன.

ஈரான் அரசு இணைய மற்றும் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தது போல் சாட்டிலைட் தகவல் தொடர்பையும் துண்டிக்கும் என்று கூறியுள்ள பஹ்லவி, ஈரான் மக்களின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்தது போல, ஐரோப்பிய நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று கூறிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைதியாகப் போராடும் மக்களைக் கொன்றால், ஈரான்மக்களுக்குத் துணையாகக அமெரிக்கா களம் இறங்கும் என்று ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் உட்பட உலகம் முழுவதும்உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு அமெரிக்க துணை நிற்கும் என்று துணை அதிபர் ஜேடி வான்ஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags: americaviolencepeople protestIranusTrump
ShareTweetSendShare
Previous Post

“ஷக்ஸ்காம்” இந்தியாவுக்கே சொந்தம்- சீனா-பாகிஸ்தான் CPEC பாதையை நிராகரித்த இந்தியா..சிறப்பு தொகுப்பு

Next Post

அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் காரில் பயணம் – ஜெய்சங்கருக்காக அரிதான பாதுகாப்பு திட்டம்..அமெரிக்கா செய்தது என்ன?

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies