அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் காரில் பயணம் - ஜெய்சங்கருக்காக அரிதான பாதுகாப்பு திட்டம்..அமெரிக்கா செய்தது என்ன?
Jul 28, 2026, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் காரில் பயணம் – ஜெய்சங்கருக்காக அரிதான பாதுகாப்பு திட்டம்..அமெரிக்கா செய்தது என்ன?

Manikandan by Manikandan
Jan 10, 2026, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் நிதியின்றி முடங்கிய தருணத்தில், நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணத் திட்டம் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு என்ன நடந்தது?

அமெரிக்காவில் அரசு முடங்கிய தருணம், கடுமையான உறைநிலை, விமானங்கள் இல்லை.. இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் தொலைவுக்குக் காரில் பயணம் செய்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…. அதுவும் மிகவும் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் என்றால் நம்ப முடிகிறதா… அப்படித்தான் நடந்ததாகக் கூறுகிறார் Supervisory Special Agent Gabriel Macias….2025ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று அவர் எழுதி வெளியிட்ட அந்தக் கட்டுரை,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நம்ப முடியாத பயண அனுபவத்தையும், பாதுகாப்பையும் விவரிக்கிறது… அமெரிக்காவில் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் பட்ஜெட் மசோதாக்கள் முறைப்படி நிறைவேறாததன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தடைபட்டது.. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அரசு நிர்வாகங்கள் முடங்கியிருந்த தருணம் அது…

நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்ற G7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கனடாவில் இருந்த ஜெய்சங்கர், பின்னர் நியூயார்க் சென்றார். கடுமையான உறைபனி, ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்காத சூழலுக்கு மத்தியில் 670 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணிக்க வேண்டியதிருந்தது….

அவரைப் பத்திரமாக அழைத்துச் செல்ல “mission-defining challenge” என்ற திட்டம் வகுத்தது அமெரிக்கா… நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் ராஜதந்திர ரீதியிலான சந்திப்பு நடைபெற வேண்டிய சூழலில், கனடா எல்லையில் உள்ள லூயிஸ்டன்-குயின்ஸ்டன் பாலத்தில் ஜெய்சங்கரை வரவேற்ற அமெரிக்க அதிகாரிகள், மன்ஹாட்டனுக்கு ஏழு மணி நேர பயணத்தைத் தொடங்கினர். Diplomatic Security Service, New York Field Office, Buffalo Resident Office பாதுகாவலர்கள் இணைந்து துணிச்சலான செயல் திட்டத்தை உருவாக்கினர்.

ஜெய்சங்கர் கவச வாகனத்தில் அமர, ஓட்டுநர்கள் சுழற்சி முறையில் இயக்கினர். தடையற்ற, தொடர்ச்சியான பயணத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்… 670 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் பாதுகாப்பு நீடித்த நிலையில், இறுதியாக நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை கூறுகிறது…

2025 அக்டோபர் 1 முதல் நவம்பர் 13 வரை சுமார் 43 நாட்கள் அங்கு நீடித்த அரசு முடக்கத்திற்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயண திட்டம் மிகவும் சாதுர்யமாக, தைரியமாகத் திட்டமிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது..

இது மிகவும் சவாலான பணியாகக் கருதப்பட்டாலும், ஸ்பெஷல் ஏஜெண்டின் கட்டுரைக்கோ, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைக் இந்திய தரப்பு எதிர்வினையாற்றவில்லை. அதனை உறுதிபடுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: shutdownAgent Gabriel Maciasupervisory Special Agent Gabriel MaciasIndiaJaishankarnew yorksecurity arrangementsUS government
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – தீவிரமடையும் போராட்டம்…இணைய சேவை துண்டிப்பு!

Next Post

ரியல் எஸ்டேட் அதிபராக மாறும் ட்ரம்ப் – கிரீன்லாந்து மக்களையே விலை பேசும் அமெரிக்கா

Related News

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies