அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் காரில் பயணம் - ஜெய்சங்கருக்காக அரிதான பாதுகாப்பு திட்டம்..அமெரிக்கா செய்தது என்ன?
Sep 12, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் காரில் பயணம் – ஜெய்சங்கருக்காக அரிதான பாதுகாப்பு திட்டம்..அமெரிக்கா செய்தது என்ன?

Manikandan by Manikandan
Jan 10, 2026, 03:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் நிதியின்றி முடங்கிய தருணத்தில், நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணத் திட்டம் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு என்ன நடந்தது?

அமெரிக்காவில் அரசு முடங்கிய தருணம், கடுமையான உறைநிலை, விமானங்கள் இல்லை.. இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் தொலைவுக்குக் காரில் பயணம் செய்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…. அதுவும் மிகவும் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் என்றால் நம்ப முடிகிறதா… அப்படித்தான் நடந்ததாகக் கூறுகிறார் Supervisory Special Agent Gabriel Macias….2025ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று அவர் எழுதி வெளியிட்ட அந்தக் கட்டுரை,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நம்ப முடியாத பயண அனுபவத்தையும், பாதுகாப்பையும் விவரிக்கிறது… அமெரிக்காவில் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் பட்ஜெட் மசோதாக்கள் முறைப்படி நிறைவேறாததன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தடைபட்டது.. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அரசு நிர்வாகங்கள் முடங்கியிருந்த தருணம் அது…

நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்ற G7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கனடாவில் இருந்த ஜெய்சங்கர், பின்னர் நியூயார்க் சென்றார். கடுமையான உறைபனி, ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்காத சூழலுக்கு மத்தியில் 670 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணிக்க வேண்டியதிருந்தது….

அவரைப் பத்திரமாக அழைத்துச் செல்ல “mission-defining challenge” என்ற திட்டம் வகுத்தது அமெரிக்கா… நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் ராஜதந்திர ரீதியிலான சந்திப்பு நடைபெற வேண்டிய சூழலில், கனடா எல்லையில் உள்ள லூயிஸ்டன்-குயின்ஸ்டன் பாலத்தில் ஜெய்சங்கரை வரவேற்ற அமெரிக்க அதிகாரிகள், மன்ஹாட்டனுக்கு ஏழு மணி நேர பயணத்தைத் தொடங்கினர். Diplomatic Security Service, New York Field Office, Buffalo Resident Office பாதுகாவலர்கள் இணைந்து துணிச்சலான செயல் திட்டத்தை உருவாக்கினர்.

ஜெய்சங்கர் கவச வாகனத்தில் அமர, ஓட்டுநர்கள் சுழற்சி முறையில் இயக்கினர். தடையற்ற, தொடர்ச்சியான பயணத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்… 670 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் பாதுகாப்பு நீடித்த நிலையில், இறுதியாக நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை கூறுகிறது…

2025 அக்டோபர் 1 முதல் நவம்பர் 13 வரை சுமார் 43 நாட்கள் அங்கு நீடித்த அரசு முடக்கத்திற்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயண திட்டம் மிகவும் சாதுர்யமாக, தைரியமாகத் திட்டமிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது..

இது மிகவும் சவாலான பணியாகக் கருதப்பட்டாலும், ஸ்பெஷல் ஏஜெண்டின் கட்டுரைக்கோ, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைக் இந்திய தரப்பு எதிர்வினையாற்றவில்லை. அதனை உறுதிபடுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: shutdownAgent Gabriel Maciasupervisory Special Agent Gabriel MaciasIndiaJaishankarnew yorksecurity arrangementsUS government
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – தீவிரமடையும் போராட்டம்…இணைய சேவை துண்டிப்பு!

Next Post

ரியல் எஸ்டேட் அதிபராக மாறும் ட்ரம்ப் – கிரீன்லாந்து மக்களையே விலை பேசும் அமெரிக்கா

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies