திமுகவா? தவெகவா? - உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்
Jan 18, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

Manikandan by Manikandan
Jan 18, 2026, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே வெளியேறும் என எதிர்பார்த்து காத்திருந்த திமுகவினர் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி அதிக இடத்தில் போட்டி, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது.

தமிழக மக்களுக்கென தாங்கள் கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு அவசியம் என காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

பீகாரில் படுதோல்வியை தழுவியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைத்து வழங்கிட திமுக தலைமை முடிவெடுத்திருக்கும் நிலையில், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு திமுகவை மேலும் கொந்தளிப்படையச் செய்திருக்கிறது.

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, மாணிக்கம் தாகூர், ஆகியோருடன் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அதிக இடங்களில் போட்டி மற்றும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தீவிரப்படுத்தியதால் திமுகவினரும் சமூக வலைதளங்களில் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையே சமூகவலைதளங்களில் போர் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்து ஆலோசனை நடத்தியது.

 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளனர்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவது தற்கொலைக்கு சமம் எனவும், தவெக எனும் குழந்தைக் கட்சியை நம்பி திமுகவை விட்டு வெளியேறினால் காங்கிரசுக்கு தான் பாதிப்பு என சில தலைவர்கள் பேசியுள்ளனர்.

மேலும் இந்திய அளவில் இருக்கும் காங்கிரஸ் இயக்கம், இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுடன் கூட்டணி வைப்பதா ? எனவும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தவெக புதுக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருக்கும் நிலையில், துளியளவும் மரியாதை தராத திமுகவை விட்டு வெளியேறுவது தான் காங்கிரஸ் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும் எனவும் சிலர் கூறியுள்ளனர்.

திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை மிகவும் மோசமாக நடத்துவதாகவும், கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை கூட தற்போது பெறுவது கடினம் என தெரிவித்த சில தலைவர்கள், தவெகவுடன் இணைந்தால் 60 தொகுதிகள் வரை பெறலாம் என ஆலோனையும் கூறியுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் போலவே அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தால் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், பொதுவெளியில் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு வாய் பூட்டு போடப்பட்டுள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரம், மகாராஷ்டிராவின் மும்பை என அடுத்தடுத்து, பாஜக தன் வெற்றி முத்திரைகளை பதித்து வரும் நிலையில், மறுபுறம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு தானாகவே வெளியேறும் என எதிர்பாத்திருந்த திமுகவினருக்கும் டெல்லி மேலிட அறிவிப்பு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரர் என்ற மனப்பான்மையில் இருப்பதால் திமுக – காங்கிரஸ் கூட்டணி விரைவிலேயே உடைந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

Tags: tn bjpvcktvkELECTION 2026bjpDMKElectionCongressbjp india
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

Next Post

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies