தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு வரவேற்பை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,
தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும் எனவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி
அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்பதுடன், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவரது பதிவில், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றாக இணைந்து திமுக ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்!
மக்கள் நலனை மையமாக கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அமமுகவை வரவேற்று வாழ்த்திய இபிஎஸ்-க்கு நன்றி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! – டிடிவி தினகரன்
















