தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறைச் சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர்கள் விருதுகளை அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பான சேவைக்காக தமிழகத்தை சேர்ந்த ஐஜி மகேஸ்வரி, எஸ்பி அன்வர் பாஷா, டிஎஸ்பி குமாரவேலு ஆகியோருக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தப் பணித் துறையில், தலைமை வார்டர் சேதுராமனுக்கும், புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் கோதண்ட ராம் சிந்தா ஆகியோருக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக காவல்துறை பிரிவில் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக 21 பேருக்கு “தகைசால் பணிக்கான விருது” வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
















