சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் அதிகாரிகளை பதவி உயர்வு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகவும் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சீனாவின் ராணுவ தளபதியான ஜெனரல் ஜாங் யூஷியா, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். குழந்தை பருவத்தில் இருந்தே அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ஜாங் யூஷியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் முக்கிய தொழில்நுட்ப தரவுகளை, அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் ராணுவ அதிகாரிகளை பதவி உயர்வு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஜாங் யூஷியாவை ஒழுக்க மற்றும் சட்ட மீறல் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாக சீனாவின் தேசிய ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
ஆனால், அணு ஆயுத திட்ட ரகசியங்களை கசியவிட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சீனா அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
















