தமிழக பழங்குடியின சமூகத்தினரை பிரதமர் மோடி கவுரவித்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பழங்குடியினர் மக்களின் தாமரை எழுச்சி மாநில மாநாடு விமர்சையாக நடைபெற்றது.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு மாநாட்டில் உரையாற்றினார்.
பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள், விழாக்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், தமிழகத்தில் 37 சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகே, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைத்தன எனவும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை கண்டுகொள்ளாத பழங்குடியின சமூகத்தினரை பிரதமர் மோடி கவுரவித்துள்ளதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
















