மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் திட்ட பணிகளுக்கு அதிகாரிகள் கமிஷன் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற முறையில் திட்டப்பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், நகராட்சி அலுவலகத்திலேயே திட்டப்பணிகளுக்கு அதிகாரிகள் கமிஷன் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
















