கன்னியாகுமரியில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் அழுத்தத்தால் பாதியில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மார்த்தாண்டம் – ஆற்றூர் நெடுஞ்சாலையில் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் ஓடையில் தேங்கி வந்தது.
பின்னர் அதில் உடைப்பு ஏற்படவே, சாலையில் கழிவு நீர் பாய்ந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உடைப்பை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் திடீரென அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு திமுகவினரின் அழுத்தமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















