ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி கண்காட்சியான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ’ கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் நவீன போர் விமானங்கள் மற்றும் வணிக ரீதியிலான விமானங்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பிரம்மாண்ட கண்காட்சி, உலக நாடுகளின் ராணுவ வலிமையையும், விமானப் போக்குவரத்துத் துறையின் அதிநவீன தொழில்நுட்பங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித் திருவிழாவான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2026’-ல், இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற ‘சாரங்’ (Sarang) ஹெலிகாப்டர் சாகசக் குழுவினர் தங்களது பிரமிப்பூட்டும் வான்வழிச் சாகசங்களால் சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்த்தனர்.
இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவான இந்த ‘சாரங்’ குழுவின் செயல்பாடு, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை உலக நாடுகளுக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
















