சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் குடும்ப வறுமை காரணாக பனிப்பூரி விற்பனை செய்த 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், பெற்றோரின் உடல்நிலை சரியில்லாததால், இரவு நேரத்தில் பனிபூரி விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் கடை அருகே தள்ளுவண்டி கடை நடத்திவரும் சிலர் தொழில் போட்டி காரணமாக சிறுவனை தாக்கியுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலரிடம் சிறுவன் அழுதப்படி கூறிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















