திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இதுவரை குழு அமைக்காதது மனக்கசப்புக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இதுவரை திமுக குழு அமைக்கவில்லை என்றும் இந்த உரசலுக்கு திமுகவே காரணம் என தெரிவித்தார்.
கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால் மட்டுமே மதசார்பற்ற கூட்டணி என திமுக கூறிக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது எனறும் விஜய்க்கு ஆதரவு இருப்பது உண்மை என தான் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அந்த வாக்கு வங்கி தொகுதிகளில் வெற்றி பெற்று சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறிதான் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
















