மதுரைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய வடமாநில கொள்ளையனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை போலீசார் அண்மையில் சுட்டுப் பிடித்தனர்.
இதில் ஆசீப் என்பவர் உயிரிழந்த நிலையில், உத்தரபிரதேசத்தை ச் சேர்ந்த பர்ஹான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பர்ஹான் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளதால், அவரை மதுரையில் உள்ள குண்டர் தடுப்பு சட்ட ஆணையத்தில் ஆஜர்படுத்த கோவை போலீசார் அழைத்துச்சென்றனர்.
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே போலீசாரை ஏமாற்றி பர்ஹான் தப்பியோடிவிட்டார்.
வடமாநிலத்தில் ஏராளமான கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் பர்ஹான் மீது உள்ள நிலையில், அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
















