திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் இயந்திரத்தில் உயிருடன் பல்லி, கரப்பான் பூச்சி, அட்டை உள்ளிட்டவை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரசித்தி திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் கருவறை உள்ளிட்ட இடங்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் உயிருன் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பாசிபடிந்த நிலையில் காட்சியளித்த தண்ணீரில் அட்டைப்பூச்சியும் காணப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததோடு, அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
குடிநீரில் பல்லி உள்ளிட்ட பூச்சிகள் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















