ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடந்த மகா சிவராத்திரி விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி மகம், சிவராத்திரி ஆகியவை முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மீன லக்னத்தில் விழாவுக்கான கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















