எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் தேதியில் இருந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த விடாமல், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திரியை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர்.
ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத நிலையில் கடும் அமளி நீடித்ததால் நாளை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியால் அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர், 5-வது முறையாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
















